Saturday 19 April 2014

சொஜ்ஜி (SOJJI)


தேவையான பொருட்கள்:
  • பச்சை அரிசி              1 கப்
  • பயத்தம் பருப்பு          1/2 கப்
  • கடுகு                        1 டேபிள்ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு        1 டேபிள்ஸ்பூன்
  • கடலை பருப்பு           2 டேபிள்ஸ்பூன்
  • பெருங்காயபொடி       சிறிதளவு
  • சிவப்பு மிளகாய்          2
  • பச்சை மிளகாய்           2
  • கருவேப்பிலை           1 கொத்து
  • எண்ணெய்                 தாளிப்பதற்கு
  • உப்பு                          தேவைக்கேற்ப
  • தண்ணீர்                    2 கப்
  • இஞ்சி                        1 சிறு துண்டு


செய்முறை:

முதலில் அரிசியையும், பயத்தம் பருப்பையும் தனி தனியாக சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும்.
 

பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து (pressure cooker ரிலும் வைத்துக்கொள்ளலாம் ) 
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், சிவப்பு மிளகாயை கிள்ளி போட்டு, பின் கடலை பருப்பு , உளுத்தம்பருப்பு கறிவேப்பிலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.

 


பெருங்காய பொடியையும் சேர்த்து வறுபட்டதும் பொடியாக நறுக்கிய  வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை  சேர்த்து நன்கு வந்தங்கியதும் தண்ணீரை  ஊற்றி கொதிக்க விடவும்.
 

கொதிக்கும் நீரில் உப்பையும் சேர்க்கவும்.
நீர் நன்றாக கொதிக்கும் பொழுது அரிசியையும் பயத்தம் பருப்பையும் போட்டு மூடி வேக விடவும்.




வெந்தவுடன் சூடாக தேங்காய் சட்னியுடன் காலை அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.


குறிப்பு:
 இதில் காரட்(carrot),பீன்ஸ்(beans), உருளை கிழங்கு (potato) போன்ற காய்களையும் பொடியாக வெட்டி சேர்க்கலாம்.
தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
பருப்பு அதிகம் பிடிக்காதவர்கள் சிறிது குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை அரிசி சுண்டல் என்றும் கூறுவர்.


கடாய் மஷ்ரூம்(kadaai mushroom)








தேவையான பொருள்கள்

மஷ்ரூம்                             1 பாக்கெட் 
வெங்காயம்.                    1 பெரியது
தக்காளி.                           2
இஞ்சி பூண்டு விழுது   1 தேக்கரண்டி
மிளகாய் தூள்                 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்                    1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்          1 தேக்கரண்டி
குடை மிளகாய்                1
கொத்தமல்லி                  சிறிதளவு
சீரகம்.                                 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்          தேவையான அளவு


செய்முறை 


  • முதலில் காலானை (mushroom)நீரில் கழுவி மேலே இருக்கும் அழுக்குகளை நீக்கி பின் சுத்தமான துணியால் துடைத்து  நறுக்கி வைக்கவும் .
  • வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய்   ஊற்றி காய்ந்ததும் சீரகம் பொட்டு பொரிய விடவும். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் நறுக்கி வைத்திருக்கும்  தக்காளியை  போட்டு குழைய வதக்கவும்.
  • பின்பு குடைமிளகாய் சேர்த்து சிறிது வதங்கியதும் (குடைமிளகாய் நிறம் மாறி விடாமல் லேசாக வதங்கினாலே போதும்) கரம் மசாலா,மிளகாய் தூள்,மல்லித்தூள்,உப்பு  ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் நறுக்கி வைத்திருக்கும் காலானையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • காலான் வதங்கும் போது நீர் விடுமாகையால் தனியாக நீர் சேர்க்க  வேண்டி இருக்காது. தேவைப்பட்டால் சிறிது நீரை சேர்த்து மூடி 5 நிமிடம் சிறு தீயில் கொதிக்க விடவும்.
  • கொதித்து சரியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.
  • இத்துடன் பாதி வெங்காயத்தை கட்டமாக வெட்டி தனி தனி இதழ்களாக பிரித்து  எண்ணெய்யில் வதக்கியும் சேர்க்கலாம்.