Wednesday 19 October 2016

புளி சொஜ்ஜி/ புளி சுண்டல் (PULI SOJJI/PULI SUNDAL)


இது காலை அல்லது இரவு உணவாக செய்யும் ஒரு மிக எளிய பதார்த்தம்.

தேவையான பொருட்கள்:
அரிசி                                          1 கப்
தண்ணீர்                                   2 கப்
புளி                                              சிறிய எலுமிச்சை அளவு
சிவப்பு மிளகாய்                    5
பெருங்காயத்தூள்                1 டீஸ்பூன்
உப்பு                                            தேவையான அளவு
எண்ணெய்                               3 டேபிள் ஸ்பூன்
கடுகு                                            1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு                         3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு                     2 டேபிள் ஸ்பூன்\
கறிவேப்பிலை                         1 கொத்து
மஞ்சள் பொடி                          1 டீஸ்பூன்


செய்முறை:
1.முதலில் அரிசியை எண்ணெய் விடாமல் நன்கு சிவக்க  வறுத்துக் கொள்ளவும்.

2. புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் (அல்லது) pressure cooker ல்எண்ணெய் விட்டு
கடுகு சேர்த்து வெடித்ததும் மிளகாயை கிள்ளி போட்டு  வறுபட்டதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காய பொடி சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் கறிவேப்பிலை சேர்த்து புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்




4. கொதிக்கும் நீரில் உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும்.

5. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.


6. பாத்திரத்தை மூடி நன்கு வேக விட்டு இறக்கவும்.


குறிப்பு:
இதனுடன்  அப்பளம் அல்லது கூழ் வடகம் சேர்த்து  சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
காரம் அதிகம் தேவைபடுபவர்கள் மிளகாய் அதிகம் சேர்க்கலாம்.



Tuesday 18 October 2016

Egg-less chocolate cake with butter cream frosting


This is a perfect eggless chocolate cake which is super moist , crumble,soft and less Sweet.
I have tried this cake many times and it came out very good and perfect always. Recently i made this cake for my hubby's friend Birthday. I have used American Butter cream for frosting.
I am sure this is foolproof recipe that anyone can try with the exact measure.
Ok.,Now lets move on to the recipe :)

Ingredients:

  • All purpose Flour                  1 cup
  • Granulated Sugar                   3/4 cup
  • Baking Soda                           1/2 tsp
  • Baking Powder                       1/2 tsp
  • Oil                                           1/2 cup
  • Hot Coffee                              1/4 cup*
  • Milk                                        1/4 cup
  • Yogurt                                     1/4 cup
  • Vanilla Essence                       1 tsp
  • Unsweetened Cocoa powder  6 tblsp


* For Hot coffee mix 1 tsp instant coffee powder in 1/4 cup hot water.

Method:
Preheat the oven for 180 degree Celsius for 10 minuites
Prepare the cake tin by dust with four or lined with the parchment paper.
Sieve the dry ingredients ie., Flour, cocoa powder, baking powder and baking soda for 3 or 4 times.

Mix oil and sugar well.Then add vanilla essence, milk and yogurt. Beat well till it becomes creamy.





Add the dry ingredients little by little and mix by using a spatula. Don't over mix because it will make the cake hard.

Lastly add the hot coffee and mix well.

Pour the cake mixture in to the prepared cake tin and bake for 35 to 40 minutes or check by inserting a toothpick into the cake and it should comes out clean.
keep the cake outside for 10 to 15 minute then invert on a wire rack till it cools.


After cooling can frost as per your wish.

Notes:
This cake will be of less sweet anf if you want you can add 2 or 3 tbls extra sugar.
Hot coffee will give excellent flavor to this cake, but if you don't like means can avoid.
Dont open in the first 25 minutes of the baking because it will make sudden decrease in heat and produce dent in the center of the cake.
After adding the dry ingredients don't over mix, just use a spatula to make them incorporate well.








Tuesday 26 July 2016

வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை (Velli Pillaiyaar Kozhukkattai)

தேவையான பொருட்கள்:
முதலில் பச்சை  அரிசியை கழுவி சுத்தம் செய்து சற்று நேரம் துணியில் உலர்த்திவிட வேண்டும். நன்கு உலர்ந்ததும் எடுத்து mixie யில் மாவாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தயார் செய்த அரிசி  மாவு   1 கப்
வெல்லம்                                       1/2 கப்
தண்ணீர்                                       1 கப்
தேங்காய் துருவல்                    1 கப்
பயத்தம் பருப்பு                         3 மேஜை கரண்டி
ஏலக்காய் பொடி                       1 /2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி வெல்லம் போட்டு கரைந்ததும் வடிகட்டி கொள்ள வேண்டும். பின்பு வடி கட்டிய வெல்ல நீரில் பயத்தம் பருப்பை போட்டு 5 நிமிடம் கொதித்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, போட்டு கலந்ததும்  மாவையும் கொட்டி கெட்டி ஆகும் வரை நன்கு கிளறி இறக்கவேண்டும்.
பின்பு சற்று சூடு ஆறியதும், கைகளில் கொஞ்சம் எண்ணெய்  தடவி கொண்டு கொழுக்கட்டைகளை செய்து இட்லி தட்டில் வைத்து ஆவியில்  வேகவைத்து எடுக்க வேண்டும்.

வெள்ளி பிள்ளையார் பூஜை செய்யும் முறையை கீழே உள்ள திரியில் காணலாம்.

Monday 25 July 2016

வெள்ளி பிள்ளையார் வழிபாடு(Velli Pillaiyaar Vazhipaadu)



இது ஆடி(அ)தை(அ)மாசி  மாதத்தில் தான் நினைத்த காரியம் / வேண்டுதல் நிறைவேற விநாயகரை வேண்டி செய்யப்படும் ஒரு பூஜை ஆகும்.
இதை செவ்வாய் பிள்ளையார் பூஜை முடித்த வாரத்தில் வரும் வெள்ளிக் கிழமை அதிகாலை நேரம் அல்லது மாலை சூரிய அஸ்தமனத்திற்கு  பிறகு செய்யும் பூஜை ஆகும்.

முன்னொரு காலத்தில் ஒரு கணவன் , மனைவி தாழங்காட்டில்  உள்ள விநாயகரை நினைத்து செய்த வேண்டுதல் நிறைவேறியதாக ஒரு கதை உண்டு. அதேபோல் இந்த விநாயகரை நினைத்து இந்த  பூஜையை செய்தால் நம் கோரிக்கையையும் இறைவன் நிறைவேற்றி வைப்பார் என்று நம்பிக்கை.
இதற்கும் செவ்வாய் பிள்ளையாரை போன்று ஒரு ரகசிய (??) கதை உண்டு. இதையும் பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சொல்ல கூடாது என்பது ஐதீகம்.

பூஜை செய்யும் முறை:

இதுவும் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு பூஜை. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அதோடு இப்பூஜையில்  செய்யப்படும் சிறப்பு கொழுக்கட்டைகளையும் பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும்.
முதல் நாளே வீட்டை துடைத்து சுத்தம் செய்து பூஜை அறையில் ஈர மாவுக் கோலம் இட  வேண்டும்.
பின்பு ஒரு  கொழுக்கட்டை மாவில் செய்த பிள்ளையார்( ஒரு சிறிய பலகை போல் செய்து அதன் மேல் இரண்டு உருண்டைகளை வைக்க வேண்டும்), கொழுக்கட்டை அகல் விளக்குகள்(கொழுக்கட்டை மாவில் வில்லுக்கு போல் செய்து ஆவியில் வேகவைத்து எடுத்தது) ,கொழுக்கட்டை மாவில் செய்த சிறிய கன்று குட்டி,கன்றின் தலை, உடல், கால்கள், ஒரு ஆண் மற்றும்  ஒரு பெண் உருவம் ஆகியவற்றை  கொழுக்கட்டை பொம்மைகளாக  செய்து வேகவைத்து நெய்வேதியமாக  வைக்க வேண்டும்.

ஒன்பது அகல் விளக்குகள் செய்வது சிறப்பு.
இந்த கொழுக்கட்டைகளை பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் மட்டுமே உன்ன வேண்டும். மீதம் உள்ள மாவில் சிறு உருண்டைகள் அல்லது பிடி கொழுக்கட்டைகள் செய்து வீட்டில் உள்ள ஆண்களுக்கு பூஜை முடிந்த பிறகு கொடுக்கலாம்.

இந்த கொழுக்கட்டை பிள்ளையாரை ஒரு வாழை இலையில் வைத்து  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூ, அருகம்புல்  வைக்க வேண்டும். பின்பு வெற்றிலை, பாகு, பழம், பூ, எலுமிச்சை பழம், சிறிய வாழைக் குருத்து,செவ்விளநீர் (சிவப்பாக உள்ள முழு இளநீர்), தாழன்செடி ,தாலிக்கொடி(வெற்றிலை வடிவில் இருக்கும் இலைகளை கொண்ட ஒரு கொடி வகை ) ஆகியவற்றை அந்த வாழை  இலையில் வைக்க வேண்டும். பின்பு செய்து வைத்த கொழுக்கட்டை அகல் விளக்கை நெய் விட்டு  ஏற்றி வெள்ளி பிள்ளையார் கதையை மூன்று முறை கூற வேண்டும். இரண்டு மூன்று  பெண்கள் சேர்ந்து செய்யும் பொழுது வயதில்  மூத்தவராக இருப்பவர் இந்த கதையை கூறுவார்.
நாம் நெய்வேத்தியத்திர்க்காக செய்யும் கொழுக்கட்டை வடிவங்களுக்கான விளக்கங்கள் அந்த கதையில் கூறப்படும் .
சூடம், சாம்பிராணி காட்டி பூஜையை முடிக்க வேண்டும்.
பின்பு பூஜை செய்த இடத்தில் உள்ள பொருட்களை நீர் நிலைகளான ஆற்றில் அல்லது குலத்திலோ  கரைத்து விடலாம்.

வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை செய்முறையை  கீழே உள்ள திரியில் காணலாம்.
வெள்ளி பிள்ளையார் கொழுக்கட்டை

செவ்வாய் பிள்ளையார் வழிபாடு பற்றிய தகவல்களையும், பூஜை செய்யும் முறையும் கீழே உள்ள திரியில் கொடுத்துள்ளேன்.
செவ்வாய் பிள்ளையார் பூஜை

Sunday 24 July 2016

ஆடி மாதம் சிறப்புகள்-Specialties of Aadi month

தமிழ் மாதங்களில் வரும் நான்காம் மாதமே ஆடி.
சூரிய பககாவனின் கதிர் நகர்வின் திசையை வைத்து ஆண்டினை  இரண்டாக பிரிப்பர். 
  • தட்சிணாயனம்  
இது சூரியன் வட திசையில் இருந்து தென்  திசை நோக்கி நகர்வது.
  • உத்திராயணம்
இது சூரியன் தேன் திசையில் இருந்து வாடா திசை நோக்கி நகர்வது.

இந்த தட்சிணாயணம் ஆடிமாதத்தில் ஆரம்பித்து மார்கழி மாதம் வரையிலும், உத்திராயணம் தை மாதத்தில் தொடங்கி ஆனி மாதம் வரையிலும் நடக்கும்.

இந்த ஆடி மாதம் சக்தி மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மனை வழிபட   ஏற்ற மாதம்.
இதற்கு  அறிவியல் ரீதியான காரணத்தையும் எங்கோ படித்த நினைவு இருகின்றது.
இந்த ஆடி மாதம் கால மாற்றத்தின் துவக்கம் ஆகும். கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் நேரம். இந்த திடீர் மாற்றத்தால்  நோய்கள் தாக்க கூடிய வாய்புகள் மிக அதிகம்.
எனவே கிருமி நாசிநிகலான மஞ்சள் வேப்பிலை போன்றவற்றின் பயன்பாட்டினால் இந்த நோய்களின் தாக்கம்  குறையும். எனவே தான் இந்த மாதத்தில்அ ம்மன் விழாக்களை அதிகமாக உருவாக்கி உள்ளனர் நம் முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் சிறப்பாக கருதப்படும் நாட்கள்.

  • ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்
இம்மாதத்தில் வரும் வெள்ளி செவ்வாய் கிழமைகள் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.இந்நாளில் அம்மனை வழிபட்டால் மால்கைய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி மாத வெள்ளி கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்வதும் மிக சிறப்பு.
ஆடி மாதம் வரும் பதினெட்டாம் நாளே  ஆடிபெருக்கு நாளாகும். இப்படிகையை பற்றிய மேலும் விடயங்கள்  கீழே உள்ள திரியில் உள்ளது.
           ஆடி பதினெட்டு(அ)ஆடி பெருக்கு 
  • ஆடி அமாவாசை
ஆடி மாதம் வரும் அமாவாசை நாளில் கடலில் குளிப்பதும்,  பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருவதும்  சிறப்பு.
  • ஆடி பௌர்ணமி
இந்நாளிலேயே ஹயக்ரீவர் அவதாரம் செய்த நாளாக கூறுவார். எனவே அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
  • ஆடி கிருத்திகை
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை  முருகபெருமானுக்கு மிக உகந்த நாளாக கொடாடபடுகிறது. எனவே அனைத்து முறைகள் கோவில்களிலும் சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடைபெறும்.
இது பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக விநாயகரையும், அவ்வையாரையும் நினைத்து ஆடி மாத  செவ்வாய் கிழமைகளில்  செய்யும் ஒரு பூஜை ஆகும். இதை பற்றிய மேலும் விபரங்கள் கீழே உள்ள திரியில் உள்ளது.
  • ஆடி பூரம்
ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திருநாளாகும்.

இந்த ஆடி மாதத்தில் தான் ஆற்றில் புது நீர் பெருக்கெடுக்கும் காலம் ஆகையால் இந்த மாதத்தில் புதிதாக விதை விடுவார்கள்.

ஆடி பெருக்கு(அ) ஆடி பதினெட்டு(Aadi perukku/Aadi pathinettu)


வருடத்தின் நான்காம் மாதமான ஆடி மாதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு. ஆடி மாதத்தில் வரும் பதினெட்டாம் நாளையே ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம்
ஆடி மாதத்தின்  சிறப்புகளை இங்கு காணலாம்.


தமிழகத்தில்  முக்கியமாக தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு அடிப்படையான   நீருக்கு  ஆதாரம் காவிரி நதியே.
இந்த காவிரி நதிக்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழாவே இந்த ஆடி பதினெட்டு. நாகை மாவட்டம் பூம்புகாரிலிந்த காவிரி ஆறு கடலுடன் கலக்கிறது, இங்கே காவிரிக்கென்று தனி கோவிலும் உண்டு.

இந்த ஆடி மாதத்தில் தான் காவிரியின் பிறப்பிடமான குடகு மலை பகுதியில் பருவமழை பொழியும் நேரம், எனவே அந்த நீர்தமிழகத்தில்  காவிரியின்  புது நீராக  பெருக்கெடுத்து ஓடும். விவசாயிகள் இந்த நீரைக்  கொண்டே அந்த வருட சாகுபடிக்கான விதைகளை இடுவர்.

நமக்கு உணவு தரும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்தையுமே தெய்வமாக வணங்கி விழா எடுத்து நன்றி தெரிவித்து  சிறப்பு செய்வது நம் தமிழர்களின் பழக்கம். சூரியனுக்கு பொங்கல், உழவனுக்கு உறுதுணையாக நிற்கும் மாட்டிற்கு மாட்டு பொங்கல், போன்று நீரிற்கு இந்த பதினெட்டாம் பெருக்கு.
இந்த நாளில் தான் அந்த வருடத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தங்கள் முஹுர்த்த மாலைகளை நீரில் விடுவது வழக்கம்.

இது நம் முன்னோர்களால் மிக சிறப்பாக கொண்டாட பட்ட விழாக்களில் ஒன்று. இதை கல்கியின் பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்திலேயே காணலாம்.
சோழ நாட்டில் இவ்விழாவை மக்கள் கொண்டாடி மகிழ்ந்த காட்சிகளை நம் மனக்கண்களுக்கு படம் போன்று அழகாக விவரித்திருப்பார்.

பொன்னியின் செல்வனில் இருந்து சில வரிகள்:

"ஆடி பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரையை தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம் அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெரும் ஏரிகள் பூரணமாக நிரம்பி கரையின் உச்சியை தொட்டு கொண்டு அலைமோதி கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீர நாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கு கடலாக மாற்றியிருந்தது.அந்த ஏரியின் எழுபத்தி ஏழு கணவாய் வழியாகவும் தண்ணீர் குபுகுபுவென்று பாய்ந்து பக்கத்தில் நேடுதூரதுக்கு நீர்வளத்தை அளித்துக்கொண்டு இருந்தது.
அந்த ஏரி தண்ணீரை கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் கழனிகளில் உழவும், விரை தெளியும் , நடவும் நடந்து கொண்டு இருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுகொண்டிருந்த குடியான பெண்களும் இனிய இசைகளில் அங்கங்கே பாடி கொண்டிருந்தார்கள்.
            "வடவாறு பொங்கி வருகுது     
               வந்து பாருங்கள் பள்ளியரே! 
                   வெள்ளாறு விரைந்து வருகுது 
                       வேடிக்கை பாருங்கள் தோழியரே !!
                           காவேரி புரண்டு வருகிறது காண 
                               வாருங்கள் பாங்கியரே !!! "

கொண்டாடபடும் முறை:

இதை காவிரி நதி அல்லது அதன் கிளை நதிகளுக்கோ அல்லது நீர் தேக்கங்களுக்கோ  சென்று படைப்பது வழக்கம். எங்கள் ஊரில் இருந்து மணிகர்ணிகை என்ற கிளை நதி பக்கம் என்பதால் அங்கு சென்று படையல் செய்வோம்.

 சிறுவர்கள் அழகாக வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப் பட்ட தேர் போன்ற அமைப்புடைய சப்பர தட்டியை இழுத்து வருவர்.
சிலர் நொனாக்காய் மற்றும் தென்னை ஓலை குச்சிகளை வைத்து செய்யப்பட்ட சிறிய தேரை இழுத்து வருவதும் உண்டு.
பெண்கள் வீட்டிலிருந்தே பல கலவை சாதங்களை(சக்கரை பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை) நெய்வேத்தியமாக  கொண்டு வருவர்.
எள்ளு உருண்டை, மாவிளக்கு ஆகியவற்றையும் நெய்வேத்தியங்களாக படைப்பது வழக்கம்.

முதலில்ஆற்றின் கரை யோரத்தை சுத்தம் செய்து அங்கு நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும்.பின்பு ஆற்றின் அடியில்  இருந்து மண் எடுத்து எத்தனை சுமங்கலிகள் உள்ளனரோ அத்தனை  உருண்டைகளாய்  பிடித்து வைத்து அதற்கு  மஞ்சள் குங்கும போட்டு வைத்து பூக்களை வைக்க வேண்டும். இதையே  காவிரி அம்மனாக நினைத்து அதற்க்கு காதோலை கருகமணி(ரோஜா வர்ணம் அடித்த பனை ஒலை   சுருளில் சிறிய கருப்பு வளையல் கோர்க்க பாட்டிற்கும்), மஞ்சள் தடவிய நூல், போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.
பின்பு விளக்கை ஏற்றி வைத்து விட்டு அம்மனுக்கு முன்பு ஒரு தலை வாழை இலையில் வெற்றிலை பாக்கு , பழம்(பேரிக்காய் கட்டாயம் இருக்கும்), பூ, மஞ்சள் , குங்குமம், தேங்காய், போன்றவற்றை வைக்க வேண்டும்.பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைப்பர்.
(வீட்டிலேயே படைப்பவர்கள் மண்ணில் செய்வதற்கு பதில் மஞ்சளில் அம்மனை செய்து வழிபடலாம்.)

பின்பு வீட்டில் இருந்து தயார் செய்யப்பட்டு எடுத்து வந்த எள் உருண்டை , மாவிளக்கு,கலவை  சாதங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதோடு சிறிது பச்சரிசியுடன் பயத்தம் பருப்பு(பாசி பருப்பு) சேர்த்து ஆற்று நீரில் கழுவி அதில் வெல்லம் கலந்து நிவேதியமாக படைக்க வேண்டும்.
படைக்கும் முன்பு, சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் வேறு நகையை அணிந்து கொண்டு  தங்கள் தாலியை காவிரி அம்மனுக்கு போட்டு படைத்த பின்பு அதை தங்கள் கணவன்மார்களின் கையினால் அணிந்து கொள்வார்கள்.
படைத்து முடித்ததும் அம்மன் மேல் இருந்த மஞ்சள் நூலினை எடுத்து ஆண்கள் கைகளிலும் ,பெண்கள் கழுத்திலும் அணிந்து கொளவார்கள்.
பின்பு அந்த அம்மனாக நினைத்து வழிபட்ட மண் உருண்டைளை ஆற்று நீரில் கரைத்து இந்த வருடமும் தங்களுக்கு  உறுதுணையாக இருந்து விவசாயம் வளம் பெற உதாவுமாறு  வேண்டிக்கொள்வார்கள்.

தற்போதைய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததாலும், ஆற்றங்கரைக்கு சென்று படைக்கமுடியாததாலும்  வீட்டிலேயே மோட்டாருக்கும் கிணற்றுக்கும்  படைத்து  விட்டாலும்  உறவினர் நண்பர்களோடு குடும்பமாக சப்பரம் இழுத்து சென்று நுரை ததும்ப பெருக்கெடுத்து ஓடும் ஆற்றிற்கு படைத்து  வந்த நினைவுகள்  நிஜமாகவே  ஒரு அழகிய கனா காலமாகவே மனதில் பதிந்து உள்ளது.






Saturday 23 July 2016

Kunafa (Step by Step Pictures)


Kunafa or kunafeh is a popular middle eastern sweet. Long thin noodle threads forms the layering and for filling we can use cream or cheese as per our liking. On the top sugar syrup, which gives an excellent taste to this sweet. We can pour condensed milk also.
It is the dessert having very sweet creamy cheesy bomb:) in between the little crunchy mildly sweet layers.
In this recipe i have used store bought kunafa dough.-

Now lets move on to the recipe.
As said above this recipe is having 3 steps.
  • Layers
  • Filling
  • Sugar syrup.
  • Toppings (optional)


Ingredients:
For layering
Kunafa/kataifi dough                   1 Packet
Unsalted Butter(Melted)              2 cups

For Filling:
Full cream cheese                        4
Fresh cream/Thick cream            400 ml
Milk                                              1 cup
Maida                                            3 tablespoon
Corn Flour                                    3 tablespoon
Sugar                                             7 or 8 tablespoon

For Sugar Syrup
Sugar                                            1 cup
Water                                            1 cup
Vannila essence                            1 teaspoon

For Garnishing
Pistachios(partially powdered)    1/2 cup


Method:

First grease a cake tin with butter and set ready and Preheat the oven for 10 minutes in 200 degree Celsius heat.


Defrost the kunafa dough and just crumble it in a large bowl. Pour the melted butter into the kunafa dough and mix it gently till it get combined properly.





Place half of the dough in the cake tin and press it gently with hands. keep it aside.

Now prepare the fillings.

Place a heavy bottom pan in stove and heat the milk with sugar. mix the maida and cornflour with 3 tablespoon milk , once milk comes to boil add the milk mixture and mix carefully.
stir continuously to avoid the lumps. once it becomes thick add cream , cheese and mix well.once it becomes thick , remove from fire.





Pour the thick cream mixture on the tapped kunafa base and spread evenly.

Then put the remaining kunafa dough  on the top and press gently. It should cover the cream mixture fully.



Bake this  for 30 to 35 minutes on 200 degree Celsius.


The top should be in golden brown colour.


Let it sit in the oven for 10 mins.

While the time of baking prepare the sugar syrup.
Take water and sugar in a heavy bottomed pan and allow it to boil. once it becomes think (almost like gulab jamun syrup) add vanilla essence and mix.



Run over a sharp knife around the walls of the pan to take the cake easily from the tin.Then turn it upside down on a plate and pour the prepared hot sugar syrup on the top evenly.
Or else u can pour the syrup on the top with out transferring it to the plate.
After pouring the syrup garnish the top with pistachios. Then cut and serve.

It will be good to eat as warm with the delicious cream in center .





Notes:

  • You can pour condensed milk on the top along with sugar syrup for the rich taste.
  • Also can use any other nuts for garnishing.